தமிழ் இனத்தின் விடுதலைக்காக களமாடி வீரச்சாவினைத் தழுவிக் கொண்ட மாவீரகளை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் உணர்வு பூர்வமாக இன்று அனுஷ்ட்டிக்கப்பட்டது
அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மாவீரர்களுக்கு மக்கள் தம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்
இன்று மலை 6.06நிமிடத்திற்கு விளக்கேற்றி மக்கள் அஞ்சலி செலுத்தினர்
தற்போதைய அரசாங்கமானது குறித்த நினைவேந்தலினை தடைசெய்துள்ள போதிலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ்பேசும் மக்கள் மாத்திரமன்றி உலகலவிய ரீதியிலுள்ள தமிழ் பேசும் மக்களும் இன்றைய மாவீரர்நாள் நிகழ்வுகளில் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .