600 சிறைச்சாலை கைதிகளிற்கு பொதுமன்னிப்பு!

b60cf 1

கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு ஒரு தொகுதி சிறைக்கைதிகளிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பளிக்க தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, 600 கைதிகள் பொதுமன்னிப்பைப் பெறுவார்கள்.கடுமையான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நீண்டகாலமாக தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்ட போதும், அது குறித்து அரசு கவனம் செலுத்த மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.