எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் வங்காள விரிகுடாவில் குறைந்த அழுத்த வளிமண்டலவியல் அமுக்கம் உணரப்படும் என்பதால் மீனவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் கடும் மழை பொழிய கூடும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.