தோல்விக்கு பொறுப்பேற்று சஜித் பதவி விலகுகிறார்!

Sajith 2
Sajith 2

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தோல்வி உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் பதவிலிருந்து விலகவுள்ளதாக அவரது தரப்பு தெரிவித்துள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச, தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதாகவும், வெற்றிபெற்றுள்ள கோத்தாபய ராஜபக்சவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அறிவித்துள்ளார்.

தோல்விக்குப் பொறுப்பேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கவுள்ளதாகவும், எவ்வாறாயினும் மக்களை சேவையை தொடரவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.