தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கான சேவைகளை வழங்க தபால் திணைக்களம் தயாராக உள்ளது -பிரதி தபால்மா அதிபர்!

c295189708ff9da8acb1caa2394ac9c5 XL
c295189708ff9da8acb1caa2394ac9c5 XL

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடிதங்களை விநியோகிக்க தமது திணைக்களம் தயாராக உள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்ஹ தெரிவித்துள்ளார்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரச அல்லது தனியார் நிறுவனங்கள் தபால் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் இதனை மேற்கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.

மேலும், குருணாகலை மாவட்டத்தில் முடக்கப்பட்டுள்ள தபால் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.