முகநூல் ஊடாக மாவீரர் நினைவேந்தல் பாடல்களை பதிவேற்றிய இளைஞர் கைது !

1606559244 Arrested 2
1606559244 Arrested 2

தனது முகநூல் ஊடாக மாவீரர் நினைவேந்தல் பாடல்களை பதிவேற்றிய குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவரைதிருகோணமலை சம்பூர் பகுதியில் வைத்து தாம் கைது செய்துள்ளதாக சம்பூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (27) இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சம்பூர் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் எனவும் சம்பூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மாவீரர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய முகநூல் ஊடாக மாவீரர்களை நினைவு கூர்ந்து பாடல்களை பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காவல்துறை நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் குறித்த இளைஞனை மூதூர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சம்பூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.