கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை -ரோஹித அபேகுணவர்தன

HYTG
HYTG

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்க்கப்பட்டுள்ளது என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கிழக்கு முனையத்தின் 49 வீத உரிமம் இந்தியாவுக்கும்,51 வீத உரிமம் இலங்கை துறைமுக அதிகார சபை வசம் இருக்கும் வகையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்.

கிழக்கு முனையம் அபிவிருத்தி தொடர்பில் ஆராய அமைச்சின் செயலாளர்கள் மற்றும் துறைமுக அபிவிருத்தி துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குழுவின் அறிக்கையினை அடிப்படையாக கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்