முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் 200 கிராம் ரி.என்.டி வெடிப்பொருட்களுடன் கைதான இரண்டு இளைஞர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று முற்பகல் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டனர்.
இதன்போது, அவர்களை நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த இரண்டு இளைஞர்கள் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – உடையார்கட்டு பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டனர்.