தெதுருஓயா பகுதியில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொலை!

நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்த தமிழ் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்
நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்த தமிழ் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்

தெதுருஓயா பகுதியில் இடம்பெற்ற மணல் கடத்தல் நடவடிக்கையை சுற்றிவளைக்கச் சென்ற காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த, காவல்துறை அதிகாரி மீது டிப்பர் ரக வாகனம் ஒன்றினால் மோதி கொல்லப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தப்பிச்சென்ற டிப்பர் ரக வாகனத்தின் சாரதியை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.