மன்னார் மாவட்டத்தில் மரநடுகை திட்டம் ஆரம்பம்

மன்னார் மாவட்டத்தில் குணரத்தினம் பவுண்டேசனின் அனுசரணையுடன் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலனாதனின் வழிகாட்டலில் மரநடுகை திட்டம் வைபவ ரீதியாக கடந்த 06 ஆம் திகதி ஆரம்பிக்கபட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

மன்னார் மாவட்டத்தில் 3000 கன்றுகளை நாட்டுவதுடன், மன்னார் மாவட்டத்தை செழிப்பான மாவட்டமாக மாற்றுவதே இதன் நோக்கமாகும். இதுவரை 2500 நிழல் கன்றுகள் நடப்பட்டுள்ளன.