பொகவந்தலாவ குயினா கிழ்பிரிவில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
பொகவந்தலாவயில் குறித்த பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை ஒருவருக்கு தொற்றுறுதியானமையை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தநிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த 34, 75, 64, 13 மற்றும் 9 வயதுகளை உடைய 5 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக அந்த பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
அத்துடன் அதேதோட்டத்தில் முன்னர் இனங்கானப்பட்ட ஒருவருடன் தொடர்புடைய 41 வயதான ஒருவருக்கும் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
இந்தநிலையில் அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதேவேளை, வடகொழும்பு பகுதியில் உள்ளவர்களுக்கே நாளாந்தம் அதிகளவில் கொரோனா தொற்றுறுதியாவதாக கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி கார்த்திகேசு ஸ்ரீபிரதாபன் தெரிவித்தார்.