வவுனியா நெடுங்கேணியில் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீதி அபிவிருத்தி திணைக்களத்தில் பணியாற்றியவர்கள் சிலர் கொரோனா தொற்றுடன் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் சுகாதார பிரிவினரின் அர்ப்பணிப்பான சேவையினூடாக கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோனையில் ஒருவருக்கு கொரனா தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.