மட்டக்களப்பு இருதயபுரம் பிரதேசத்தில் நேற்றைய தினம் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
கைக்குண்டொன்றை அவதானித்த பொதுமக்கள் இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் குறித்த இடத்திலிருந்து கைக்குண்டை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.