தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக 1138 பேர் பாதிப்பு!

20201201 144410 2
20201201 144410 2

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 314 குடும்பங்களை சேர்ந்த 1138 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒருவர் காணாமல் போயுள்ளார், 3 நபர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர் மழை மற்றும் காற்று காரணமாக யாழ் மாவட்டத்தில் 15 வீடுகள் முழு அளவில் சேதம் ஏற்பட்டுள்ளன, 140 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளன, இதுவரை 3 இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக சண்டிலிப்பாய், சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை பகுதியிலேயே அதிகமான வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.