நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையினை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடாத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
இதேவேளை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்கான புதிய திகதி குறித்து விரைவில் தீர்மானம் மேற்கொள்ளப்படுமென கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கல்விப்பொதுத்தராதர சாதாரண தரபரீட்சையினை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 28 திகதி வரை நடாத்துவதற்கு கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேற்றினை எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.