மஹரசிறையில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியிடப்படும் – துசார உபுல்தெனிய

upuldeniya
upuldeniya

மஹரசிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களின் விபரங்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

மஹரசிறை கலவரத்தில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களின் விபரங்களை விரைவில் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ள அவர் சிறைக்கைதிகளின் குடும்பத்தவர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறைச்சாலை கலவரத்தின் போது ஏற்பட்ட தீயினால் பெருமளவு ஆவணங்கள் அழிந்துபோயுள்ளதன் காரணமாகவே உறவினர்களுக்கு விபரங்களை உடனடியாக வழங்க முடியாத நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.