யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 15459 குடும்பங்களை சேர்ந்த 51602 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் .சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ள அதேவேளை 6 பேர் காயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு யாழ்.மாவட்டத்தில் தற்போது 36 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 976 குடும்பங்களை சேர்ந்த 3540 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 53 வீடுகள் முழுமையாகவும், 2008 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துளதாகவும் சூரியராஜா குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக யாழ் மாவட்டத்தில் சாவகச்சேரி, கோப்பாய், வேலணை, பருத்தித்துறை, சண்டிலிப்பாய் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக .சூரியராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.