நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 438 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 406 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியோரின் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 38 ஆக காணப்படுகின்றது.
இதில் 6 ஆயிரத்து 471 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 433 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் கொரோனா தொற்றினால் இதுவரை 129 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.