முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக நந்திக்கடல் நிறைந்து வருகின்ற நிலையில் வட்டுவாகல் பாலத்தில் நீர் தேங்கி வருவதோடு வயல் நிலங்கள் பலவும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு இருக்கின்றது
இந்நிலையில் தற்போது நந்திக்கடல் கடலுடன் சங்கமிக்கும் இடத்திற்கு அண்மையில் குறித்த நந்திக் கடல் நீரை கடலுக்குள் அனுப்புவதற்கு நீரை கடலுக்குள் வெட்டி விடும் செயற்பாடு இடம்பெற்று வருகின்றது