இங்கிலாந்து – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் அதிகாரப்பூர்வமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இரு அணி முகாம்களிலும், அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல்களில் பணியாற்றும் ஊழியர்கள் சிலரும் கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து, தென்னாபிரக்காவுக்கான இங்கிலாந்தின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான சுற்றுப் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இத் தொடரானது பிற்காலத்தில் விளையாடப்படலாம் என்றும் இரு கிரிக்கெட் அணி நிர்வாகங்களும் தெரிவித்துள்ளன.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலிரு போட்டிகளும் திட்டமிட்டபடி நடைபெறாமல் இரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்ட நிலையிலேய இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இங்கிலாந்து அணிக் குழாமில் உறுதிப்படுத்தப்படாத இரண்டு நேர்மறையான சோதனைகளின் ஒப்புதலுக்காக அணி காத்திருக்கும் நிலையில் செவ்வாய் அல்லது புதன்கிழமை தொடரின் இரண்டாவது போட்டியை நடத்த முடியும் என்று முன்னர் கூறப்பட்டது.
எனினும் இரு அணி வீரர்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியம் மற்றும் நலன்களுக்காக இந்த சுற்றுப்பயணத்தை கைவிட இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் கூட்டாக முடிவெடுத்துள்ளது.
அதனால் வியாழக்கிழமை ஒரு பட்டாய விமானத்தில் இங்கிலாந்து அணி வீரர்கள் அவர்களது நாட்டுக்கு புறப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.