லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து வெளியேறியது குசல் பெரேராவின் அணி!

images 11
images 11

நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் இருபதுக்குஇருபது தொடரில் இருந்து குசல் பெரேரா தலைமையிலான கண்டி டஸ்கர்ஸ் அணி வெளியேற்றப்பட்டுள்ளது.

காலி கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்ததன் காரணமாக கண்டி டஸ்கர்ஸ் அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

இந்த நிலையில்கண்டி டஸ்கர்ஸ் அணியை 9 விக்கெட்டுகளால் வென்ற காலி கிளாடியேட்டர்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதன்படி பானுகா ராஜபக்ஷ தலைமையிலான காலி கிளாடியேட்டர்ஸ், திசாரா பெரேரா தலைமையிலான யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் ,
ஏஞ்சலோ மத்தியூஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் மற்றும் தாசுன் ஷானகா தலைமையிலான தம்புள்ளவைக்கிங்ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இதற்கமைய முதலாவது அரையிறுதிப் போட்டியில் தம்புள்ளவைக்கிங் மற்றும் கொழும்பு கிங்ஸ்ஆகிய அணிகள் மோதவுள்ளன.

அத்துடன் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் , மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ்ஆகிய அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.