இந்திய அணி தேர்வுக்குழுவின் பதவிக்காலம் முடிவடைந்தது

msk prasath
msk prasath

இந்திய கிரிக்கெட் அணியின் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழுவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்குழு தலைவராக எம்.எஸ்.கே.பிரசாத் 2015ம் ஆண்டு தலைவராக நியமிக்கப்பட்டார். இவருடன் ககன் கோடா நியமிக்கப்பட்டார்.

ஜட்டின் பரஞ்போ, சரன்தீப் சிங், தேவங் காந்தி உள்ளிட்டோர் 2016ல் நியமிக்கப்பட்டனர்.

லோதா பரிந்துரைக்கு முன் தேர்வுக்குழுவினரின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகளாகவும், லோதா பரிந்துரையின் பின்னர் ஐந்து ஆண்டுகளாக மாற்றப்பட்டது. எனினும், பிரசாத்தின் பதவிக்காலம் குறித்து முடிவு செய்யப்படாமல் இருந்தது.

இந்நிலையில்தான் பிசிசிஐ தலைவர் கங்குலி தலைமையில் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பழைய நடைமுறையின்படி தேர்வுக்குழுவின் காலம் நான்கு ஆண்டு. அதனால் பதவிக்காலம் முடிந்து விட்டதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதை கங்குலி உறுதி செய்துள்ளார்.

மேலும், 2016ல் தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிதாக தேர்வுக்குழு நியமனம் செய்யப்பட உள்ளனர்.