பளுதூக்கலில் யாழ். மங்கை ஆர்ஷிக்காவுக்கு வெள்ளிப் பதக்கம்

arshika
arshika

நேபாளத்தின் கத்மண்டுவில் நடைபெற்று வருகின்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான பளுதூக்கலில் பங்குகொண்ட யாழ். சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி விஜயபாஸ்கர் ஆர்ஷிக்கா வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.

பெண்களுக்கான 64 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட ஆர்ஷிக்கா, ஸ்னெச் முறையில் 70 கிலோகிராம் மற்றும் கிலீன் என்ட் ஜேர்க் முறையில் 100 கிலோகிராம் உள்ளடங்கலாக 170 கிலோகிராம் எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இம்முறை தெற்காசிய விளையாட்டு விழா பளுதூக்கல் அணியில் இடம்பிடித்த இளம் வயது வீராங்கனையாகவும், தெற்காசிய விளையாட்டு விழா போட்டிகள் வரலாற்றில் இலங்கை சார்பாக பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றுகின்ற முதல் தமிழ் வீராங்கனையாகவும் அவர் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.