இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அவிஸ்க குணவர்தன இரண்டு குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
எமிரேட் கிரிக்கெட் சபையின் மோசடி எதிர்ப்பு விதிகளின் கீழ் அவிஸ்கவுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சுயாதீன ஊழல் எதிர்ப்பு தீர்ப்பாயத்தினால் அவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார்.