எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை!

632807 1
632807 1

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகளில் தமது நாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாக பணிப்பாளர் அஸ்லே கில்ஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகளை வேறு நாடுகளில் நடத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

எனினும், இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா, இலங்கை, பங்களாதேஸ் மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகளுடனான கிரிக்கட் தொடர்களில் விளையாடவுள்ளது.

இந்த போட்டிகள் திட்டமிட்டப்படி நடைபெறுமானால் அதில் இயன்மோர்கன், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட வீரர்களின் பங்களிப்பு அவசியமாகும்.

எனவே, சர்வதேச போட்டி அட்டவணைக்கு பாதிப்பின்றி இந்தியன் பிரிமியர் லீக் தொடர் நடத்தப்படுமாயின் அதன் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்ககூடிய வாய்ப்புள்ளதாக அஸ்லே கில்ஸ் தெரிவித்துள்ளார்.