இந்திய அணியின் பயிற்றுவிப்பாளராகும் ராகுல் ட்ராவிட்

1597294108515
1597294108515

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இந்திய குழாமின் பயிற்றுவிப்பாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் ட்ராவிட் செயற்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டு அணிகளுக்கும் இடையில் எதிர்வரும் யூன் மாதம் 3 ஒருநாள் சர்வதேச மற்றும் 3 இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட தொடரினை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சவுரவ் கங்குலி அண்மையில் அறிவித்தார்.

இந்தநிலையில், விராட் கோலி தலைமையிலான இந்திய குழாமினர் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் தொடருக்காக இங்கிலாந்து செல்வதால், அந்த தொடரில் பங்கேற்காத மற்றும், ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடியவர்கள் கொண்ட மற்றுமொரு இந்திய குழாம் இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கான பயிற்றுவிப்பாளராக ராகுல் ட்ராவிட்டை ஈடுபடுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்த நிலையில், அதற்கு ராகுல் ட்ராவிட் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.