சமிந்த வாஸ் மற்றும் இசுரு உதானவிற்கு கொரோனா இல்லை – போட்டியை நடத்த தீர்மானம்

1621750719 vas 2
1621750719 vas 2

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவருக்கும், பயிற்சியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

இதனால் போட்டி நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகி இருந்த நிலையில் சமிந்த வாஸ் மற்றும் இசுரு உதானவிற்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுக்கு உள்ளான மூவருக்கும் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அவர்களில் இருவருக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இலங்கை அணியின் புதிய வேகப்பந்து வீச்சாளர் ஸிரான் பெர்ணான்டோவிற்கு மாத்திரம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் போட்டியை நடத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.