இலங்கை அணியிலிருந்து மூவர் இடைநிறுத்தம்!

107425551 gettyimages 1130215705
107425551 gettyimages 1130215705

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மெண்டிஸ்,நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் உடனடியாக அணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இதனை ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள மேற்படி மூவரும் உயிர்குமிழி முறைமையை மீறியமைக்காக இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்று குழுக்கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தையடுத்து இந்த மூவரையும் உடனடியாக நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.