இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்த போட்டி லண்டன் பிரிஸ்டலில் இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில் ஆறுதல் வெற்றியை பெறுவதற்கான பிரயத்தனங்களை இலங்கை அணி மேற்கொள்ளும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற வேண்டுமாயின் அணித்தலைவர் குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டி சில்வா, வனிது ஹசரங்க, தசுன் சானக ஆகியோர் மேலும் சிறப்பான ஆட்டத்திறன்களை வெளிப்படுத்த வேண்டும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.