ஆபாசமான வர்ணனையால் சர்ச்சையில் சிக்கிய தினேஷ் கார்த்திக் மன்னிப்பு கோரினார்!

dk
dk

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் நேர்முக வர்ணனையின்போது, அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாக பேசியமைக்காக இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் மட்டையையும், பக்கத்துவீட்டுக்காரரின் மனைவியையும் ஒப்பிடும் வகையில் தினேஷ் கார்த்திக் பேசியமைக்கு சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன.

தினேஷ் கார்த்திக்கின் ஆபாசமான இத்தகைய விமர்சனத்துக்கு அவரின் மனைவியும், தாயும் கூட கண்டனம் வெளியிட்டனர்.

இந்நிலையில், தினேஷ் கார்த்திக் மன்னிப்புக் கோரியுள்ளார். தினேஷ் கார்த்திக் தனது கிரிக்கெட் வர்ணனையின்போது, “ பெரும்பாலான துடுப்பாட்ட வீரர்கள் தங்களின் மட்டையை விரும்பவதில்லை. அது அவர்களுடனே இருக்கும். ஆனால், மற்ற வீரர்கள் பயன்படுத்திய மட்டைகளைதான் அதிகமாக விரும்புவார்கள். மட்டை என்பது அடுத்தவர் மனைவி போல. அதுதான் சிறந்ததாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து சமூகவலைத்தலங்களில் கடும் கண்டனம் எழுந்திருந்த நிலையில், இலங்கை – இங்கிலாந்து இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியின்போதான, வர்ணனையில் தனது முந்தைய அருவருக்கத்தக்க பேச்சுக்கு பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார்.

கடந்த போட்டியில் நான் பேசிய பேச்சுக்கு அனைவரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். உண்மையில் எந்த உள்நோக்கத்துடன் அவ்வாறு பேசவில்லை. ஆனால், அது தவறுதான்.

அனைவரிடமும் இதற்காக மன்னிப்புக் கோருகிறேன். நிச்சயமாக அந்த வார்த்தை சரியானது அல்ல என்றார்.