இந்தியாவுடனான தொடருக்காக பெயரிடப்பட்டிருந்த 30 பேரில் 29 பேர் கையொப்பம்!

5623ad3490d16131028513bab2dfcd1b XL
5623ad3490d16131028513bab2dfcd1b XL

இந்திய அணியுடனான கிரிக்கெட் தொடருக்காகப் பெயரிடப்பட்டிருந்த 30 இலங்கை வீரர்களில் 29 பேர் தொடருக்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எஞ்சலோ மெத்தியூஸ் தம்மை மறு அறிவிப்பு வரையில் எந்த தொடரிலும் இணைக்க வேண்டாம் என்று கோரி ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.