யூரோ கிண்ண கால்பந்தாட்ட இறுதி போட்டியில் இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் நாளைய தினம் மோதவுள்ளன.
டென்மார்க் அணியுடன் இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் 2க்கு 1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு இங்கிலாந்து அணிக்கு கிடைக்க பெற்றது.
இங்கிலாந்து கால்பந்தாட்ட அணி 55 வருடங்களின் பின்னர் முன்னணி போட்டி ஒன்றில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.