இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா

1626396853 india team 2
1626396853 india team 2

இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியைச் சேர்ந்த மேலும் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 முதல் தொடங்குகிறது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்கள் டர்ஹமில் பயிற்சியைத் தொடங்குகிறார்கள். ஜூலை 20 முதல் தொடங்கும் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.

இங்கிலாந்தில் உள்ள இந்திய வீரர்களில் இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதில் ஒரு வீரருக்குச் சமீபத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என உறுதியாகியுள்ளது. விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற இங்கிலாந்து – ஜெர்மனி அணிகளுக்கு இடையிலான யூரோ கிண்ணம் ஆட்டத்தை நேரில் கண்டுகளித்தார் ரிஷப் பந்த். இதை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ரிஷப் பந்த், கடந்த ஒரு வாரமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவருக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாததால் விரைவில் மீண்டு வந்து இந்திய அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவார் என அறியப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரரின் பெயர் பற்றி பிசிசிஐ இதுவரை தகவல் தெரிவிக்கவில்லை. இந்திய வீரர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை பிசிசிஐயின் துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா ஒரு பேட்டியில் உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் உள்ள த்ரோடவுன் நிபுணர் தயானந்த கரானி, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனம் இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளது. இதை அடுத்து தயானந்த கரானியுடன் தொடர்பில் இருந்த விக்கெட் கீப்பர் சஹாவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.