அயர்லாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான 3வது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்த போட்டி இன்றிரவு 8.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.
இதுவரை இடம்பெற்ற இரண்டு இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் ஆறுதல் வெற்றி பெறும் நோக்கில் அயர்லாந்து அணி புதிய வியூகங்களை வகுக்கவுள்ளதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.