தொடரை வென்ற இலங்கை அணிக்கு 100,000 அமெரிக்க டொலர் சன்மானம்!

download 1 91
download 1 91

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரை வென்றமைக்காக இலங்கை அணிக்கு 100,000 அமெரிக்க டொலரை சன்மானமாக வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர் நேற்று நிறைவடைந்தது.

இதில் 2 – 1 என்ற அடிப்படையில் இலங்கை அணி தொடரைக்கைப்பற்றியது.

அத்துடன், முன்னதாக 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2 – 1 என்ற அடிப்படையில் கைப்பற்றியிருந்தது.