தற்போது இடம்பெற்று வரும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய ஆடவர் ஹொக்கி அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் வென்ற பெல்ஜியம் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
முதல் கால் பாதியில் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இரண்டாவது கால் பாதியில் பெல்ஜியம் அணி கோல் ஒன்றினை பெற்றதனை அடுத்து இரு அணிகளும் 2க்கு 2 என்ற கணக்கில் சமனிலையில் இருந்தன.
மூன்றாவது பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் பெறவில்லை.
நான்காவது கால் பாதியில் பெல்ஜியம் அணி 3 கோல்கள் அடித்தது.
இறுதியில், பெல்ஜியம் அணி 5 க்கு 2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.