இந்திய ஆடவர் ஹொக்கி அணி 41 ஆண்டுகளுக்கு பின்னர் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளது.
ஜேர்மன் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி இன்று (05) காலை இடம்பெற்றது.
இதனை இந்திய அணி 5 க்கு 4 என்ற கணக்கில் வென்று பதக்கத்தை பெற்றுள்ளது.
இந்திய ஆடவர் ஹொக்கி அணி இறுதியாக 1980ஆம் ஆண்டு மொஸ்கோவில் இடம்பெற்ற போட்டியில் விளையாடி தங்கப்பதக்கம் வென்றிருந்தது.
இந்நிலையில் இந்திய ஆடவர் ஹொக்கி அணிக்கு அந்நாட்டு அரச தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.