இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரை முன்னிட்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் நடத்தப்படும் விசேட இருபதுக்கு 20 தொடர் இன்று ஆரம்பமானது.
கண்டி – பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற தொடரின் முதல் போட்டியில் எஸ்.எல்.சி கிரீன் அணியை, எஸ்.எல்.சி கிறே அணி ஒரு ஓட்டத்தினால் வெற்றிக்கொண்டுள்ளது.
நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற எஸ்.எல்.சி கிறே அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பாடிய எஸ்.எல்.சி கிறே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்தநிலையில், 168 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய எஸ்.எல்.சி கிரீன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.