பரா ஒலிம்பிக் போட்டி நாளை ஆரம்பம்!

120903095255029 DavidWeir 151166918 0
120903095255029 DavidWeir 151166918 0

மாற்றுத் திறனாளிகளுக்கான 16 ஆவது பரா ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை ஆரம்பமாகவுள்ளது.

கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுடன் இந்த பரா ஒலிம்பிக் போட்டி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

160 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தமுறை இடம்பெறவுள்ள பரா ஒலிம்பிக் போட்டிகளை பார்வையாளர்கள் போட்டி இடம்பெறும் மைதானங்களுக்குள் சென்று பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் பரா ஒலிம்பிக் போட்டியுடன் தொடர்புடைய 131 கொரோனா நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஒலிம்பிக்ஸ் கிராமத்தில் உள்ள சகலருக்கும் தினந்தோறும் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளை ஆரம்பமாகவுள்ள குறித்த பரா ஒலிம்பிக்ஸ் போட்டி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.