ஜப்பான் டோக்கியோவில் இடம்பெற்ற பராலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில் இலங்கை பராலிம்பிக் போட்டிகளில் முதன் முறையாக தலா ஒரு தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்று 57 ஆவது இடத்தினை பெற்றுக்கொண்டது.
அதேவேளை, ‘டோக்கியோ பராலிம்பிக் 2020’ நிறைவடைந்த நிலையில் சீனா 96 தங்கம் 60 வெள்ளி 51 வெண்கல பதக்கங்களை பெற்று முதலாவது நிலையில் உள்ளது.
பெரிய பிரித்தானியா 41 தங்கம், 38 வெள்ளி மற்றும் 45 வெண்கலப்பதக்கங்களை பெற்று இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா 37 தங்கம் 36 வெள்ளி மற்றும் 31 வெண்கல பதக்கங்களை பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இந்த நிலையில் அடுத்த பராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 2024 ஆண்டு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.