சென்னை சுப்பர்கிங்ஸ் அணி நாணய சுழற்சியில் வெற்றி!

chennai
chennai

14ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இன்றைய 30ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சுப்பர்கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சுப்பர்கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

டுபாயில் இடம்பெறும் இன்றைய போட்டியினை நேரில் பார்வையிடுவதற்கு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளவர்களுக்கே இவ்வாறு அனுமதியளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், டுபாய் சர்வதேச விளையாட்டரங்கிற்கு செல்லும் 12 வயதுக்குட்பட்டவர்கள் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.