ஐபிஎல் தொடரின் இறுதி இரண்டு லீக் போட்டிகளும் ஒரே சமயத்தில் நடைபெறும்!

201901090412309520 No change abroad 12th IPL Competition takes place in India SECVPF
201901090412309520 No change abroad 12th IPL Competition takes place in India SECVPF

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் இறுதி இரண்டு லீக் போட்டிகளும் ஒரே சமயத்தில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் 8 ஆம் திகதி பிற்பகலில் ஆரம்பமாகும் முதல் போட்டியில் சன்ரைஸஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளும், இரவில் இடம்பெறும் இரண்டாம் போட்டியில் ரோயல்ஸ் செலேஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த இரண்டு இறுதி லீக் போட்டிகளும் அடுத்த மாதம் 8 ஆம் திகதி இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

ஐ.பி.எல் தொடர் வரலாற்றில், ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகள் நடத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும்.