ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 142 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

royal
royal

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 52ஆவது போட்டியில் ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதி வருகின்றன.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 141 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணிசார்பில் அதிகபடியாக ஜேசன் ரோய் 44 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஹர்ஷல் படெல் 33 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இந்நிலையில், ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணி 142 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட உள்ளது.