சிம்பாப்வயிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 2020 ம் ஆண்டு அதிக போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி இலங்கை அணி சிம்பாப்வேயிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடருக்கு இலங்கை அணி தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை நேற்று அறிவித்தது.
புத்தாண்டை ஆரம்பித்து இலங்கை அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. அந்தப் போட்டிகள் எதிர்வரும் ஜனவரி 5 தொடக்கம் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அந்த போட்டிகள் ஐ.சி.சி. எதிர்கால போட்டி அட்டவணையில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இடம்பெறுகின்ற டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. எதிர்கால போட்டிகளுக்கான போட்டி அட்டவணையில் உள்ளடக்கப்பட்டிருந்தது.
சிம்பாப்வே அணிக்குள் இருந்த முரண்பாடுகள் காரணமாக அந்த தொடர் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை மூலம் இறுதி முடிவொன்று எடுக்கப்படாமல் இருந்தபோதும் சிம்பாப்வே அணிக்கு ஐ.சி.சி. இனால் விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடை கடந்த ஒக்டோபர் மாத்தில் நீக்கப்பட்டதை அடுத்து அந்தத் தொடரை நடத்துவதற்கு முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை நேற்று சனிக்கிழமை உறுதி செய்துள்ளது.