44 ஓட்டங்களுக்குள் சுருண்டது நெதர்லாந்து!

FCIbpOrWQAE6emd
FCIbpOrWQAE6emd

உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது போட்டியில் இலங்கை அணிக்கு 45 ஓட்டங்களை நெதர்லாந்து அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 10 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 44 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

நெதர்லாந்து அணியின் கொலின் அக்கர்மனை தவிர ஏனைய வீரர்கள் துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறினர்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 09 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 07 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

அத்துடன், மகீஷ் தீக்ஷன ஒரு ஓவர் பந்து வீசி 03 ஓட்டங்களைக் கொடுத்து 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இதற்கிடையில், மகீஷ் தீக்ஷன முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாகப் போட்டியின் இடைநடுவே மைதானத்தை விட்டு நீங்கினார்.

இந்நிலையில், இலங்கை அணி 45 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாட தயாராக உள்ளது.