நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய குழாமில் ரிஷாப் பண்ட் உள்ளிட்ட சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
முதலாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதோடு, இரண்டாவது போட்டியில் அவர் அணித்தலைவராகச் செயற்படவுள்ளார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் அணி தலைவராக செயற்படவுள்ளார்.
முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அஜின்கியா ரெஹானே இந்திய அணியை வழிநடத்தவுள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையில் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இதற்கமைய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.