மிக்கி ஆர்தர் பதவி விலகுவதாக அறிவிப்பு

E6zgt51VUAAq7ER
E6zgt51VUAAq7ER

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்தார்.

அதன்பின்னர், டெர்பிஷயர் கவுண்டி கிரிக்கெட் கழகத்துடன், 3 வருட ஒப்பந்தத்தில் பணிப்பாளராக பணியாற்றவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தனது பதவி விலகல் தொடர்பில், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் செயலாளர் மொஹான் டி சில்வா ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.