ஒருபோதும் குறுக்கு வழிகளை நாடாதீர்கள் ஏமாற்றாதீர்கள் என சச்சின் டெண்டுல்கர் இளைஞர்களிற்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
உலகின் முன் அம்பலப்படுவதை தவிர்க்கவேண்டும் என்றால் வாழ்க்கையில் இளைஞர்கள் குறுக்கு வழிகளை நாடுவதை தவிர்க்கவேண்டும் .
எனது வாழ்க்கையில் நான் பல பாடங்களை கற்றுக்கொண்டுள்ளேன், நான் அதிகம் பேசாது விட்ட விடயம் ஒழுக்கம்,மனதை ஒருமுகப்படுத்துதல்,கவனம், திட்டமிடல், செயற்படுத்துதல் ஆகும் .
பல தடவைகள் நான் எதிர்பார்த்தது போன்று என்னால் விளையாட முடியாமல் போயுள்ளது.
நானும் தோற்றிருக்கின்றேன் ஆனால் விளையாட்டும் சரியான அணியும் மீண்டும் எழுவதற்கும் ஏமாற்றாமல் இருப்பதற்கும் எனக்கு கற்றுக்கொடுத்தது .
பல சவால்கள் எழக்கூடும் ஆனால் ஏமாற்றவேண்டாம் ஏமாற்றினால் ஒரு நாள் உலகின் முன் அம்பலப்படுவீர்கள் .
நாங்கள் ஏதாவது விளையாட்டை விளையாட முயலவேண்டும், பழகிக்கொள்ளவேண்டும்.
இந்தியாவை விளையாட்டை நேசிக்கும் நாட்டிலிருந்து விளையாட்டில் ஈடுபடும் நாடாக மாற்றுவதே எனது கனவு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இ.