19வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் இன்று மோத உள்ளது.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் இரு அணிகளும் தோல்விகளை சந்திக்காமல் அரையிறுதியில் கால் பதித்துள்ளனர்.
கால் இறுதியில் இந்தியா அவுஸ்திரேலியா அணியையும், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அணியையும் வீழ்த்தின.
பிரியம் கார்க் தரைமையிலான இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை இந்த தொடரில் வெளிப்படுத்தி வருகின்றனது.
தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4ஆட்டங்களில் 3அரை சதங்கள் அடித்து துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் முதுகெலும்பாக திகழ்ந்து வருகிறார்.
பந்து வீச்சில் கார்த்திக் தியாகி அற்புதமாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருந்தார்.