2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கடந்த 10 வருடங்களாக நடைபெறவில்லை.
இந்நிலையில் 10 வருடங்களுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 தொடரில் இலங்கை அணி பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டிகளை அயர்லாந்து கிரிக்கட் தலைமை நிருவாகியான வொரன்ட் ட்யூட்ரோம் நேரடியாக மைதானத்திற்குச் சென்று பார்வையிட்டடதுடன் பாகிஸ்தானில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் சிறப்பானதாக காணப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
எதிர்வரும் நாட்களில் அயர்லாந்து அணி பாகிஸ்தானுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு விளையாடுவது தொடர்பில் பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.